Wednesday 25 November 2015

அன்புத் தோழர்களே! தோழியர்களே !!  GDS ஊழியர்களின் மனநிலையை உங்கள் முன் சமர்பிப்பது  கடமையாக கருதுகிறேன்.!!!! 
நாம் சுமார் இரண்டு ஆண்டுகளாக நம்மையும் 7வது ஊதியகுலுவில் இணைத்திட வேண்டும் என போராடி வந்துள்ளோம் . மத்திய அரசும், நமது இலாக்காவும்  GDS ஊழியர்களை  இது நாள் வரை ஏமாற்றிவிட்டனர் என்பதுதான் உண்மை. பலமுறை நமது சம்மேளன பொறுப்பாளர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்து எந்த கோரிக்கையையும் ஏற்காத இலாக்கா, கடந்த 06.05.2015 முதல் நடக்கவிருந்த காலவரையற்ற வேலை நிறுத்தத்தை  மந்திரி முன்னிலையில் பேச்சு வார்த்தை என கூறி மந்திரி முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி  GDS ஊழியர்களை 7வது ஊதியகுலுவில் இணைக்க முயற்சி எடுக்கப்படும் என கூறியதாக ஏமாற்றிவிட்டார்கள் . இலாக்காவும் நம்மை தொடர்ந்து ஏமாற்றி வஞ்சகம் செய்கிறது.   


ஊதியத்தில் தொழிலாளர்களுக்குள் முரண்பாடு காட்டியது, மேலும் இரண்டு, மூன்று, ஐந்து ஆண்டுகளுக்கு ஊதியமாற்றம் செய்து படு மோசமாக நமது உழைப்பை சுரண்டும் இந்த அரசு எங்கள் ஊதிய குழு அமைப்பதில் முரண்பாடு செய்து நமது கோரிக்கையை ஏற்க மறுத்து சுமார் ஓர் ஆண்டுக்கு முன் அரசு முடிவெடுத்த ஓய்வு பெற்ற இலாக்கா அதிகாரி kamalesh  Chandra தலைவராகவும் , Agra PMG T.Q.Muhammud செயலாளர் ஆகவும் கொண்ட ஊதியக்குலுவை நேற்று 24.11.2015 அன்று அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டது. இதிலிருந்து GDS என்ற இலாக்கா அடிமைகள் இலாக்காவினால் தொடர்ந்து ஏமாற்றப்படுவது உண்மையிலும் உண்மை, அதுவும் அரசுக்கு  வாடிக்கை ஆகிவிட்டது

மத்தியில் ஆளும் அரசு,  கம்பெனிகளுக்கு 10,000/- கோடி வரி தள்ளுபடி  சலுகை அளிக்கும்போது மக்களுக்கு சேவை செய்வும் GDS ஊழியர்களுக்கு செய்யும் துரோகம் எதிர்காலத்தில் பாடம் கற்றுக்கொள்ளும் என்பது உண்மையிலும் உண்மை.  


ஆகவே நாம் தற்போது செய்ய வேண்டிய கடமை, நமது சம்மேளனத்தினால் வரும் DECEMBER 01 மற்றும்  02.12.2015 இரண்டு நாட்கள் 48 மணி நேர வேலை நிறுத்தம் செய்ய இலாக்காவிற்கு கடந்த 06.11.2015 அன்று கடிதம் கொடுக்கப்பட்டு விட்டது. ஆகவே அஞ்சல் 3, அஞ்சல் 4 மற்றும் RMS பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்களை கலந்துகொண்டு  வேலை நிறுத்தத்தை சிறப்பாக நடத்தி  வெற்றிபெறச் செய்திடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.   



தோழர்களே! தோழியர்களே!! புறப்படுங்கள் 

வேலைநிறுத்த வேலைகள் செய்ய புறப்படு!!!   
அன்புடன் R.DR  Circle Secretary  GDS NFPE  

IT IS RELIABLY LEARNT THAT MINISTRY HAS APPROVED TO FORM AN OFFICIAL COMMITTEE FOR GDS EMPLOYEES HEADED BY (CHAIRMAN) SHRI. KAMLESH CHANDRA, THE RETIRED MEMBER (P), POSTAL SERVICES BOARD, NEW DELHI, THOUGH WE HAVE ANNOUNCED 48 HOURS STRIKE ON DECEMBER 1 & 2, 2015 AGAINST APPOINTMENT OF SUCH  COMMITTEE. ANYTIME THE ANNOUNCEMENT MAY BE RELEASED BY THE DEPARTMENT.

WHAT WOULD BE OUR ACTION ?  THE ENTIRE 2,65,000 GDS  BRETHREN ARE NOW STRANDED !

WE HAVE EXPERIENCED  THE OFFICER COMMITTEE VIZ. THE COMMITTEE HEADED BY SHRI . R.S. NATARAJAMURTHY FOR GDS EMPLOYEES  !

WE HAVE ALSO EXPERIENCED NOW THE JUDICIAL COMMITTEE VIZ. THE COMMITTEE HEADED  SRI. A.K. MATHUR , A RETIRED JUDGE FOR GOVT EMPLOYEES !

WE KNOW THE  APPROACH OF THE PRESENT CENTRAL GOVERNMENT.

TN CIRCLE UNION FEELS INDEFINITE STRIKE IS THE ONLY ULTIMATE ANSWER TO GET THE ATTENTION OF THE GOVT.

WE WILL CONVEY OUR STRONG FEELINGS TO THE APEX BODY VIZ. NFPE. THE FEDERAL SECRETARIAT MEETING NOW SLATED ON 26.11.2015 BY 06.00 PM AT  NEW DELHI,

WE WILL ALSO CONVEY OUR STRONG  FEELINGS TO THE CONFEDERATION. THE NATIONAL SECRETARIAT MEETING IS  NOW SLATED ON 27.11.2015 BY 3.00 PM AT       
NEW DELHI, 

TO TAKE STOCK OF THE SITUATION AND TO DECIDE IMMEDIATELY. 

WE HOPE NFPE AND CONFEDERATION  NEVER FAILED TO TAKE APPROPRIATE DECISION WITHOUT LOSS OF TIME.

GDS request our NFPE wants Indefinite strike pl consider   

No comments:

Post a Comment