Saturday 30 January 2016





LATEST NEWS FROM CIRCLE UNION ON DIFFERENT MATTERS

செய்திகள் சில 
கடந்த 28.01.2016 அன்று  -  ஏற்கனவே 08.01.2016 அன்று  நம் மாநிலச் சங்கத்தினால் கொடுக்கப்பட்ட கடிதத்தின்  அடிப்படையில் - பல்வேறு பிரச்சினைகள் குறித்து   CHIEF  PMG அவர்களிடமும் , DPS  HQ /DPS CCR அவர்களிடமும்  நாம் பேசினோம் .  அதனடிப்படியில்  மாநில நிர்வாகம் அளித்த பதில்களை  கீழே  தருகிறோம்.

1.ஒத்திவைக்கப்பட்ட அடுத்த RJCM  கூட்டம் எதிர்வரும்  16.2.2016 அன்று நடைபெறும் . அதற்கான  SUBJECTS  01.02.2016 க்குள் கிடைக்குமாறு அளிக்க வேண்டும்.

2.வெள்ள முன்பணம்,  பாதிக்கப்பட்ட பகுதிகளில் விண்ணப்பித்த ஊழியர்களுக்கு  நிச்சயம் அடுத்த வாரத்தில் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  மாநிலம் முழுதும்  வழங்கிட  நாம் கோரினோம். இறுதியில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டப் பகுதிகளுடன்  பாண்டிச்சேரி மற்றும் தூத்துக்குடி  மாவட்டப் பகுதிகளில் விண்ணப்பித்தவர்களுக்கும்  சேர்த்து வழங்கிட  CHIEF  PMG அவர்கள் உறுதியளித்துள்ளார்.

3. வெள்ளம் பாதித்த மாவட்டப் பகுதிகளில் WELFARE  FUND இல் இருந்து  உதவித்தொகை விண்ணப்பித்த GDS  ஊழியர்களுக்கு,  உரிய  VAO சான்றாவது  இணைக்கப்பட்டிருந்தால் மட்டுமே  வழங்கிடப்படும் என்று CPMG  தெரிவித்தார். இதற்கு  மாநில  சேமநல நிதியில்  உரிய அளவு தொகை இல்லையெனில், மத்திய  சேமநிதித் தொகுப்பில் இருந்து கேட்டு, பாதிக்கப்பட்ட ஒவ்வொரு ஊழியருக்கும்  குறைந்த பட்சம் ரூ.5000/- வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

4. நாம் கேட்டுக் கொண்டபடி  GDS  இலிருந்து தபால்காரராக தேர்வு பெற நடத்திடவேண்டிய  தேர்வுக்கான  அறிவிக்கையானது  கண்டிப்பாக அடுத்த வாரத்தில்  வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment