Tuesday 14 June 2016

THIRUCHI REGIONAL SECRETARY MEETTING AT THANJAVUR


கடந்த 12.06.2016 அன்று திருச்சி மண்டல AIPEU GDS சங்க கோட்ட /கிளை செயலாளர்கள் கூட்டம் தஞ்சாவூர் தலைமை தபால் அலுவலகத்தில் நடைபெற்றது. மாநில உதவி தலைவர் M .இளங்கோவன் தலைமை ஏற்றும் , அஞ்சல் 3 கோட்ட செயலாளர் தோழர் S செல்வக்குமார் முன்னிலை வகிக்க கூட்டம் மதியம் 02.30 மணி அளவில் துவங்கி மாலை 6.00 மணிக்கு முடிந்தது 
       இக்கூட்டத்தில் AIPEU GDS சங்கத்திற்கு அதிக அளவில் அதாவது அனைத்து உறுப்பினர்களையும் நமது சங்கத்தில் சேர்ப்பது , வருகிற 11.07.2016 முதல் NJCA அறிவித்துள்ள காலவரையற்ற வேலைநிறுத்தம் முழுமையாக நடைபெற ஒன்று பட்ட முயற்சியில் நாம் முழுமையாக கலந்துகொள்வது , GDS ஊதியக்குழு முன் நமது தலைவர்கள் 26.05.2016 அன்று கலந்துகொண்டு நேரில் (மெமோரண்டத்தில் கொடுத்தவைகளுக்கு ) விளக்கம் அளித்து இலாக்கா ஊழியர்களுக்கு இணையாக ஊதியம் மற்றும் அனைத்து சலுகைகளும் தந்திடவேண்டும் என வலியுறுத்தி பேசி வந்துள்ளார்கள் நிச்சயம் செய்வதாக கமிட்டி தலைவர் அவர்களும் செய்கிறேன் என கூறியுள்ளனர். நிச்சயமாக நடக்கும் என நம்புவோம் ,  
         இக்கூட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து நடத்தி கொடுத்த அஞ்சல் 3 தஞ்சை கோட்ட செயலாளர தோழர் S .செல்வக்குமார் அவர்களுக்கு நன்றி கூறுகிறோம் 



 

 

No comments:

Post a Comment