Thursday, 29 January 2015

AIPEU GR.C , TN/ NFPE GDS - STATE LEVEL DIVL/BRANCH SECRETARIES MEETING DECIDES TO GO ON THREE PHASED TRADE UNION ACTION ON STATE LEVEL SECTIONAL DEMANDS

26.01.2015 SRMU  சங்க கட்டிடம் திருச்சி 

திருச்சியில் ஒரு திருப்பு முனை !
தமிழக அஞ்சல் மூன்று  மற்றும்  NFPE  GDS  சங்கங்களின் 
 மாநில அளவிலான  கோட்ட/ கிளைச் செயலர்கள் கூட்டம் !

போராட்டக் களம் நோக்கி தமிழக அஞ்சல் மூன்று மற்றும் GDS  சங்கம் !

மூன்று கட்ட போராட்டம் ! 

முதற் கட்டம் கோட்ட/ கிளைகளில்  
கோரிக்கை மனு அளித்து ஆர்ப்பாட்டம் !

இரண்டாவது கட்டம் 
மண்டல மாநில அளவில்  தொடர் முழக்கப்  போராட்டம் ! 

மூன்றாவது கட்டம் 
மாநிலம் தழுவிய ஒரு நாள் வேலை நிறுத்தம் !

தமிழக அஞ்சல் நிர்வாகமே !

CBS /CIS   அதிரடி MIGRATION என்ற பெயரில் ஊழியர்களை 
கொடுமைப் படுத்தாதே !

CBS /CIS  குளறுபடிகளுக்கு உடனடி தீர்வு கொடு !  
பொது மக்களிடம் ஊழியர்களை  அசிங்கப்படுத்தாதே !

TARGET என்ற பெயரில் எந்தவித அடிப்படை 

வசதியும் செய்து கொடுக்காமல் INDOOR

  ஊழியர்கள் மற்றும் GDS  ஊழியர்களை 

கொடுமைப் படுத்தாதே !

EPOST  என்ற பெயரில் சினிமா நடிகைகளுக்கும்
  
அரசியல் வாதிகளுக்கும் காவடி தூக்கும்,

 இலாக்காவை அசிங்கப்படுத்தும் 
 
அதிகாரிகள் மீது  ஒழுங்கு 

நடவடிக்கை எடு !

ஆட்பற்றாக்குறையை உடனே நீக்கு ! 
SANCTIONED  STRENGTH  மற்றும் WORKING  STRENGTH  க்கு இடையிலான காலிப் பணியிடங்களை உடனே நிரப்பு !
IRREGULAR ASSESSMENT  செய்த அதிகாரிகள் மீது 
ஒழுங்கு நடவடிக்கை எடு !

ஆட்பற்றாக்குறைக்கு உடனே  OUTSOURCING  வழங்கிடு !
OUTSOURSING  வழங்கவில்லையானால்  OUTSOURSED  வேலைகளை 
ஊழியர்கள் புறக்கணிப்போம்  என்ற முடிவுக்கு தள்ளாதே !

ஞாயிறு  மற்றும் பண்டிகை தினங்களில் 
ஊழியர்களை பணிக்கு உத்திரவிடாதே ! 
MEETTING /MELA /TRAINING  போடாதே ! 
ஊழியர் அடிப்படை உரிமையை பறிக்காதே !

24 X  7 என்று MNC  COMPANY  போல அடிப்படை விதிகளை மீறி 
அஞ்சல் பகுதியில்  'கோமாளி' உத்திரவுகளை  போடும் 
அதிகாரிகளை கட்டுப்படுத்து ! 

CPMG  யுடனான எழுத்துபூர்வமான ஒப்பந்தந்தத்தை மீறி வயதானவர்களை கட்டாய 'SHRAMDHAN'  உத்திரவிடும் 
PTC  இயக்குனர் மீது நடவடிக்கை எடு !
தோழர். ஜெயக்குமார் சாவு போல 
'இன்னொரு சாவு' ஏற்படுத்தாதே !

எழுத்தர் தேர்வு முடிவுகளை ஆண்டுக்கணக்கில் 
தாமதப்படுத்தும் நிர்வாகத்தின் தூக்கத்தை  கலைத்திடு !
தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிடு ! 
ஊழியர்களை பணிக்கு அமர்த்து !

பழுது பட்ட, காலாவதியான  கணினி மற்றும் 
அதன் உபபொருட்களான PRINTER , UPS, BATTERY , 
GENERATOR களை  உடனே மாற்று !

லட்சக் கணக்கில் செலவு செய்து கட்டிடங்களை அழகு படுத்தாதே ! 
அடிப்படை கட்டுமானங்களை வழங்கு !

வேலை செய்யாத  ATM  களுக்கு 
லட்சக்கணக்கில் தினம் தினம் கட்டிடமா ?
வேலை செய்யும் ஊழியர்களுக்கு  SCANNER  கூட இல்லையா ? 
 PRINT  எடுக்க PAPER கூட இல்லையா ?
 BARCODE  STICKER  கூட இல்லையா ?
இதற்கெல்லாம் பணம் அடியோடு இல்லவே இல்லையா ?

மூன்று ஆண்டுகளாய் தேங்கிக் கிடக்கும் 
LSG  பதவி உயர்வு என்னாச்சு ?
REVISED  RECTT . RULES  அடிப்படையில்
HSG II, HSG I பதவி உயர்வு என்னாச்சு ?

தொழிற்சங்க நடவடிக்ககளுக்காக பழிவாங்கும் 
 தென் மண்டல நிர்வாகத்தை கட்டுப் படுத்து !   
தொழிற்சங்க நடவடிக்கைகளுக்காக  சட்டத்தை மீறி 
வழங்கப் பட்ட தண்டனைகளை ரத்து செய் !
சட்டத்தை குப்பையில் போடும்  திண்டுக்கல் 
கோட்ட அதிகாரியின் கொட்டத்தை அடக்கு !

ஊழல் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடு !
இடமாற்றம் மட்டும் செய்யாதே !

ஆள் இல்லாத நேரத்தில் ஆள் நிரப்பும் 
கூடங்களாக பயிற்சி மையங்களா ?

கண்மூடித்தனமான WCTC  பயிற்சிகளை உடனே நிறுத்து !
CBS அசுர வேகம் ! SANCHAY  POST  TRAININGம்  அசுர வேகம் ! 
ஏன் இந்த முரண்பாடு ! தேவையற்ற SANCHAY  POST TRAINING  ஐ 
உடனே நிறுத்து !

கணினி உபகரணங்களுக்கு AMC உடனே  அறிவி !
கண்மூடித்தனமாக STAMP  VENDOR  பதவிகளை ஒழிக்காதே !
COUNTER இல் பணிபுரியும் ஊழியர்களை 
மேலும் மேலும் கொடுமைப் படுத்தாதே !

பொது மக்கள் உபயோகத்திற்கு  ரூ. 4/- ரூ. 5/  
DENOMINATION STAMP  உடனே வழங்கு ! 

CARD , COVER , ACK  CARD , RPLI  RECEIPT  BOOK, PASS  BOOK, 
PAY IN SLIP ,  B .O .DAILY ACCOUNT உள்ளிட்ட அத்தியாவசிய 
பொருட்களை உடனே வழங்கு !

மாதாந்திரப் பேட்டிகளை நடத்திடாத 
கோட்ட அதிகாரிகள் மீது  நடவடிக்கை எடு  !

மற்றும் தேங்கிக் கிடக்கும் கோட்ட அளவிலான 
பிரச்சினைகளை உடனே தீர்த்து வை !

கோட்ட/ கிளைச் செயலர்கள் கூட்டத்தில் பெறப்பட்ட கோரிக்கை மனுக்களை  சரி செய்து MEMORANDAM  தயார் செய்யும் பணியில் மாநிலச் சங்கம் ஈடுபட்டுள்ளது . கூட்டத்திற்கு வர இயலாத கோட்ட/ கிளைச் செயலர்கள் உடன்  தங்கள் பகுதிப் பிரச்சினைகளை  மாநிலச் செயலருக்கு EMAIL  மூலம் அனுப்பிட கேட்டுக் கொள்கிறோம். பிப்ரவரி  முதல் வாரத்தில் முதற் கட்ட போராட்டம்  அறிவிக்கப்படும் !  கோட்ட/ கிளைச் செயலர்கள் தயார் நிலையில்  இருக்க வேண்டுகிறோம்.! இரண்டாவது கட்ட  போராட்டத்தில்  வேலைநிறுத்த அறிவிப்பு மற்றும்   சட்ட பூர்வமான நோட்டீஸ்  வழங்கப்படும் !

இது நம் உரிமை காக்கும் போராட்டம் !  
நம் உணர்வுக்கான போராட்டம் !
போராட்ட உணர்வு பெருகட்டும் ! 
போராட்டத்  தீ பரவட்டும் !

அஞ்சல் மூன்று கூட்டத்தின் புகைப்படங்கள் 



GDS  கோட்ட / கிளைச் செயலர்கள் கூட்டத்தின் புகைப்படங்கள் 




EDITORIAL POSTAL CRUSADER FEBRUARY-2015

MAKE INDEFINITE STRIKE FROM 6TH MAY-2015
A HISTORIC SUCCESS

          The Government of India and Department of Posts is not serious to settle the genuine demands of Postal employees. The common demands of D. A. merger, Interim relief, inclusion of GDS in 7th C.P.C. alongwith other demands have been rejected by the Government of India. The way through which Pay Commission seems to be working is not going to submit its report in the due period and no more benefit is expected to come in the wake of economic policies being pursued by Modi Government.

The genuine and justified demands of all sections of Postal , RMS and GDS employees are lying pending since long and Postal Board does not seem to be serious about the settlement of the same which are creating more difficulties to the employees.

The Postal JCA had submitted a 39 Points Charter of Demands on 1stSeptember, 2014 conveying the grievances of all sections but the Department did not pay any attention to this. Being aggrieved the Postal Joint Council of Action of NFPE, FNPO and GDS unions decided unanimously to start agitational programmes in a phased manner culminating in to an indefinite strike from 6th May, 2015 and served notice to the Department. After receiving notice Department of Posts has convened a meeting on 5th February, 2015. In the mean time Task Force Committee headed by TSR Subramaian constituted as per direction of Prime Minister  has submitted its report which has categorically mentioned to divide Department of Post in six holding Companies/Corporations to pave the way for privatization, which is a very disastrous move to destroy this department  just like BSNL. The Task Force Committee has also recommended amendment of Indian Post Office Act 1898 to give legality and licenses to Couriers Companies.

After studying Task Force Committee Report PJCA met again and decided to resist the retrograde recommendations of Task Force Committee and further submitted revised Charter of Demands mentioning “No Corporatization and No Privatization in Postal Services”   as item no. 1 and previous items as serial No. 2 to 40. Revised 40 points Charter of Demands has been submitted to the Department and discussion will take place between Postal Board and PJCA leaders on 5th Feb 2015. If the Department does not agree to stop such type of move the PJCA will intensify the agitational programmes with full strength.

Now we are facing a very crucial and critical situation. In the wake of economic policies of Central Government entire Central Government employees including Postal employees are facing serious threat for their survival. The question before us is –Are we able to protect our department and our jobs? or Are we going to surrender? The answer is no. We are not going to surrender before these attacks. We will continue to fight against these policies as we have fought earlier on so many occasions

The 145 days strike by Postmen of Pune  in 1880, 120 days strike by Postmen of Mumbai in 1920, 25 days historic strike in 1946, 5 days strike  in 1960, 1 day strike in 1968 for minimum wages , Bonus Strike of 1974, 1 day strike on 19th September, 1984 for emancipation of GDS (ED)  employees, 1993 five days strike,1996 - 4  days strike 1998, 7 days strike 2000 Dec-14 days strike , one day strike on 12.12.12 and two days strike on 12th & 13th February, 2014 are our rich heritage which shows that we have always fought with full enthusiasm and courage and defeated the retrograde and anti working  class policies of the Government of India.
 So Comrades, NFPE along with PJCA appeals to all of you to intensify the campaign. Form JCA at all levels and popularize the demands among all sections of Postal Employees and get ready for another battle to be launched  from 6th May-2015  to save the Postal Department and to save our jobs and defeat the retrograde  policies of Central Government  and disastrous recommendations of Task Force Committee.
If we fight unitedly. We will win certainly.
This a “Do or Die Battle” for all of us.

Tuesday, 30 December 2014

WISHING ALL OUR COMRADES A HAPPY NEW YEAR !


PREPARE FOR INDEFINITE POSTAL STRIKE FROM 2015 MAY 6 th

GRAMIN DAK SEVAKS DO NOT WANT SEPEREATE GDS COMMITTEE

SEPERATE COMMITTEE (WHETHER JUDICIAL OR BUREAUCRATIC) 
IS A WASTE AND FARCE.

Ø    2.76 lakhs GDS do not want a separate GDS Committee.
Ø    2.76 lakhs GDS want inclusion of GDS in the 7th CPC.
Ø    NFPE & AIPEU-GDS(NFPE) demanding inclusion of GDS in 7th CPC.
Ø    FNPO & NUGDS demanding inclusion of GDS in 7th CPC.
Ø    Confederation of Central Govt. Employees & Workers demanding inclusion of GDS in 7th CPC.
Ø    JCM National Council (Staff side) organisations including Railway & Defense Federations demanding inclusion of GDS in 7th CPC.
BUT RECOGNISED GDS UNION OF SHRI.MAHADEVAIAH IS DEMANDING SEPARTE COMMITTEE FOR GDS
*      Hon’ble Supreme Court stated that GDS are Civil Servants and they are Central Govt. Employees.
*      Justice Singhal, Chairman 4th PC stated GDS are Civil Servants and they are Central Govt. Employees.
*      Justice Charanjit Jalwar stated that GDS are Civil Servants and they are Central Govt. Employees.
*      Talwar Committee recommended to the Govt. that GDS should be included in Pay Commission and no separate committee should be appointed in future.
*      Govt. appointed 7th Pay Commission for Central Govt. Employees.
*      NFPE & AIPEU-GDS (NFPE) says GDS are part of Central Govt. Employees and they should be included in 7th CPC itself.
*      Confederation of Central Govt. Employees & Workers says that GDS are part of Central Govt. Employees and they should be incuded in 7th CPC itself.
*      JCM National Council (staff side) orgisastions including Railway & Defence Federations says GDS are part of Central Govt. Employees and they should be included in 7th CPC itself.
*      BUT RECOGNISED GDS UNION OF SHRI. MAHADEVAIAH ACCEPTED THE GOVT. STAND THAT GDS ARE NOT PART OF CENTRAL GOVT. EMPLOYEES AND HENCE HE IS DEMANDING SEPERATE COMMITTEE FOR GDS.  HE DON’T WANT GDS TO BE INCLUDED IN 7TH CPC.  HIS MAIN DEMAND IN THE CHARTER OF DEMANDS IS SEPERATE COMMITTEE FOR GDS .
*      NFPE & AIPEU-GDS (NFPE) declared joint indefinite strike under the banner of JCA from 2015 May 6th for inclusion of GDS in 7th CPC.
*      FNPO & NUGDS also declared joint indefinite strike under the banner of JCA from 2015 May 6th for inclusion of GDS in 7th CPC.
&     Confederation, Railways & Defence Federations organised joint National Convention of entire JCM staff side orgnisations and decided to organise massive Parliament March in April 2015 to declare indefinite strike of entire Central Govt. Employees.  Inclusion of GDS in 7th CPC is included in the charter of demands as number one demand.
RECOGNISED GDS UNION OF SHRI MAHADEVAIAH DON’T WANT JOINT STRIKE OF GDS & REGULAR EMPLOYEES.  HE ALWAYS DECLARES FRAGMENTED STRIKE TO TORPEDO THE UNITY OF GDS AND REGULAR EMPLOYEES.  HE IS DESPERATELY TRYING TO RETAIN HIS CONTROL OVER GDS.  HE HAS WRITTEN TO THE GOVT. NOT TO ALLOW NFPE & FNPO TO DISCUSS GDS ISSUES.  GOVT. ALSO WANTS TO DIVIDE GDS AND REGULAR EMPLOYEES SO THAT THEY CAN EASILY DENY THE LEGITIMATE DEMANDS OF THE GDS INCLUDING CIVIL SERVANT STATUS AND ALL BENEFITS OF REGULAR EMPLOYEES.
LET US ORGANISE JOINT INDEFINITE STRIKE OF FIVE LAKHS GDS & REGULAR EMPLOYEES FROM 2015 MAY 6TH UNDER THE BANNER OF POSTAL JOINT COUNCIL OF ACTION (NFPE, FNPO, AIPEU-GDS (NFPE) & NUGDS) DEMANDING INCLUSION OF GDS IN 7TH CPC & GRANT OF ALL BENEFITS OF REGULAR EMPLOYEES TO GDS ALSO.
RECOGNISED GDS UNION OF MAHADEVAIAH IS AGAINST FILING CASE IN SUPREME COURT  for grant of Civil Servant status and all benefits of regular employees to GDS.  NFPE & AIPEU-GDS (NFPE) has filed a Writ Petition in Supreme Court and after the preliminary hearing Supreme Court transferred the case to Delhi High Court.  The next hearing of the case in Delhi High Court is on 4th February, 2015.
But Shri. Mahadevaiah had filed a case in the Karnataka High Court for his own benefit requesting to grant Foreign Service benefits to him.  (Writ Petition No.24106/2005 (S.CAT).  
When he has filed Writ Petition in High Court for his own benefit it is perfectly alright, but when NFPE & AIPEU-GDS (NFPE) filed case in Supreme Court for the benefit of 2.76 lakhs GDS he is ridiculing it and opposing it.

P.PANDURANGA RAO                                                          R.N.PARASHAR
General Secretary.                                                                  Secretary General,
AIPEU-GDS(NFPE)                                                                         NFPE.

Tuesday, 11 November 2014

TN CONFEDERATION DHARNA ON 18.11.2014 IN THE PREMISES OF CIRCLE OFFICE, CHENNAI

அஞ்சல் , RMS ,MMS,GDS  கோட்ட/ கிளைச் செயலர்களே ! மாநிலச் சங்க நிர்வாகிகளே ! வணக்கம் !

மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் சார்பில் எதிர்வரும் 18.11.2014 அன்று சென்னை CPMG அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ள  தார்ணா  போராட்டத்தில்  தமிழகத்தின் அனைத்து பகுதிகளில்  இருந்தும்  பெருமளவில் ஊழியர்களை கலந்துகொள்ளச் செய்திட இன்றே  ஆயத்தப் பணிகளை மேற்கொள்வீர் !

அனைத்து மாநிலச் சங்க நிர்வாகிகளும்  தவறுதல் இன்றி இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டுகிறோம். நம்முடைய மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் மாபொதுச் செயலர் 
தோழர் M .கிருஷ்ணன் அவர்கள் இந்தப் போராட்டத்தில் நேரடியாக கலந்துகொள்வதாக அறிவித்துள்ளார்கள். எனவே இந்தப் போராட்டத்தை சிறப்பிப்பது நம் ஒவ்வொருவரின் கடமை ஆகும். 

சென்னை பெருநகரத்தில் உள்ள கோட்ட/கிளைகளைப் பொறுத்தவரை அனைத்து பகுதிகளில் இருந்தும் உணவு இடைவேளையில் ஊழியர்களை மிக அதிக எண்ணிக்கையில் திரட்டி இந்த தார்ணா  போராட்டத்தை சிறப்பிக்க  வேண்டுகிறோம்.  இது குறித்த அறிக்கையின் நகல் கீழே  பிரசுரிக்கப் பட்டுள்ளது.  இந்த நோட்டீஸ் மற்றும் போஸ்டர் இன்று அனைத்து கோட்ட/ கிளைகளுக்கும் DESPATCH  செய்யப் படுகிறது.

வெல்க போராட்டம் ! ஓங்குக தொழிலாளர் ஒற்றுமை !

J . இராமமூர்த்தி   M . துரைபாண்டியன்      S . சுந்தரமூர்த்தி 
                         தலைவர்                     பொதுச் செயலர்        நிதிச் செயலாளர்.
                                           மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் ,
                                                                    தமிழ் மாநிலம்.

P 3 CHQ SUBMITTED VIEW POINTS TO THE CHAIRMAN , TASK FORCE

CHAIRMAN, TASK FORCE ON LEVERAGING THE P.O. NETWORK  திரு  T.S.R. சுப்ரமணியன் அவர்களிடம் அஞ்சல் மூன்றின்  அகில இந்திய சங்கத்தின் சார்பாக ஆலோசனைகள் மற்றும் கோரிக்கைகளை அதன்  பொதுச் செயலர் தோழர். N.சுப்ரமணியன் அவர்கள்  அளித்துள்ளார்கள்.

அதில் இலாக்காவின்  பொது மக்கள் சேவையை மேம்படுத்தும் விதமாகவும், அதே நேரத்தில் வருவாயை ஈட்டக் கூடிய வகையிலும் பல்வேறு ஆலோசனைகளை அளிக்கப் பட்டுள்ளன .  

இதில் மிகவும் குறிப்பிடும்படியான அம்சம் என்னவெனில் , மத்திய அரசில் இருந்து 2012 இல் நம் இலாக்காவுக்கு I.T.  MODERNISATION என்ற வகையில் ஒதுக்கப் பட்ட ரூ. 5000/- கோடி தொகையானது  இலாக்காவின் அடிப்படை கட்டு மானமாகிய  கணினி மற்றும் அதன் தொடர் செயல் பாட்டு பொருள்கள் வழங்குவதற்கோ அல்லது மேம்படுத்து வதற்கோ வழங்கப்படவில்லை என்றும் அது முற்றிலும் முழுவதுமாக TECHNOLOGY  TRANSFER  என்ற வகையில் தனியார் நிறுவனங்களுக்கு மென்பொருள் பெறவே வழங்கப் பட்டுள்ளது எனவும் , 

நம்முடைய  அடிப்படை கட்டுமானம் மிகவும்  பழுதடைந்து சிதிலமாக உள்ளது என்றும் அது புதுப்பிக்கப்படவேண்டும் என்றும் புதிய கணினிகள், பிரிண்டர்கள், UPS , BATTERY , GENERATOR உள்ளிட்ட பொருள்கள் உடன் வழங்கினால் மட்டுமே அரசு நினைக்கும்  முன்னேற்றம் ஏற்படும் என்றும்,

மேலும் இதற்கு ஆட்பற்றாக்குறையும்  உடனடியாக களையப்பட வேண்டும்  என்றும்  சுட்டிக் காட்டியுள்ளார்.  

ஏற்கனவே TASK  FORCE இன் TERMS  OF  REFERENCE இல் ADEQUATE INFRASTRUCTURE  குறித்த செயல் திட்டம் இருப்பதால் நிச்சயம் இந்தப் பிரச்சினைகள் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று நம்புகிறோம். சரியான நேரத்தில் சரியான இடத்தில் இந்தப் பிரச்சினை களைக்  கொண்டு சென்றுள்ள அஞ்சல் மூன்று  அகில இந்திய பொதுச் செயலர் தோழர். N .S . அவர்களுக்கு நம் மாநிலச் சங்கத்தின் பாராட்டுக்கள்!
=R . தனராஜ் , மாநிலச் செயலர்.

ANSWER KEY FOR POSTMAN/MG EXAM(DEPTL) HELD ON 02.11.2014

ATTENTION BRANCH / DIVISIONAL / CIRCLE SECRETARIES

2014 DECEMBER 4TH

20,000 POSTAL AND RMS EMPLOYEES WILL MARCH TO PARLIAMENT

TO PROTEST AGAINST THE NEGATIVE ATTITUDE OF THE GOVERNMENT TOWARDS POSTAL EMPLOYEES INCLUDING GRAMIN DAK SEWAKS AND CASUAL LABOURERS

December 4th is nearing. Massive preparation are going on in every circle of the country. We are receiving very encouraging reports from circles. Kerala Circle which is far away from Delhi (Up & Down Six days train journey) has already booked ticket for 600 comrades. Total expenditure for Kerala Circle alone will come to Rs. 24,00,000/- (Rs. Twenty Four Lakhs). From Tamilnadu Circle also more than 400 comrades have already booked their tickets. Highest number of employees will participate from nearby circles of Delhi i.e. Uttar Pradesh, Rajasthan, Punjab, Haryana, Himachal Pradesh, Bihar, Uttarakhand etc. All other circles are also trying their best to mobilize maximum number of employees in the March.


Please ensure that number of employees as per the Quota fixed by the CHQ of each affiliated union participate in the historic parliament march WITHOUT FAIL. Please rise up to occasion. Wake up and act as responsible leaders of NFPE.
=P. Pandurangarao, General Secretary, AIPEU GDS NFPE.

Saturday, 18 October 2014

TN NFPE COC FIRST NOTICE ON DIAMOND JUBILEE CELEBRATIONS(09.11.14) RELEASED





THANKS TO CHIEF PMG, TN CIRCLE FOR GIVING LIFE TO MORE THAN 10 POSTMAN EXAM PASSED CANDIDATES

CHIEF  PMG, TN  அவர்களுக்கு தமிழ் மாநில அஞ்சல் மூன்று மற்றும் 
தமிழ் மாநில NFPE  GDS  சங்கத்தின் 
நெஞ்சார்ந்த நன்றி !

          அன்புத் தோழர்களுக்கு இனிய வணக்கம். கடந்த 24.09.2014 அன்று தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கத்தின் சார்பிலும் தமிழ் மாநில NFPE  GDS  சங்கத்தின் சார்பிலும் , நம்முடைய அஞ்சல் மூன்றின்  பொதுச் செயலர் தோழர். N .S . அவர்களுடன்  நாம் சென்று சில பிரச்சனைகளை அளித்து விவாதித்த விபரம் ஏற்கனவே நம் அஞ்சல் மூன்று வலைத்தளத்தில் கடந்த அக்டோபர் 1 ந் தேதி அன்று வெளியிட்டிருந்தோம். அதில் நாம் அளித்திருந்த ஏழு கடிதங்களில் , இரண்டு பிரச்சினைகளுக்கு  நமது CHIEF  PMG அவர்கள் தற்போது தீர்வளித்துள்ளார்.

தபால் காரர்  தேர்வில் வெற்றிபெற்றிருந்தும்  நீதி மன்ற வழக்கின் காரணமாக ஓராண்டுக்கும் மேலாக  நிலுவையில் இருந்த  10 க்கும் மேற்பட்ட GDS  ஊழியர்களுக்கு பணி  நியமன உத்தரவு.

          2012 க்கான தபால்காரர் தேர்வு 2013 ஏப்ரல் திங்களில் நடைபெற்றது.  தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு  ஆங்காங்கே  பல GDS ஊழியர்கள் பணி  நியமனம் பெற்றனர். ஆனால் ANSWER  KEY தவறு என்று கண்டுபிடிக்கப்பட்டு நம்முடைய மாநிலச் சங்கத்தால் REVALUATION செய்திட பிரச்சினை கடந்த 23.09.14 இல்  எழுப்பப் பட்டது.(பார்க்க மாநிலச் சங்க வலைத்தளச் செய்தி - செப். 2013 ) 

                இதன் காரணமாக  மாநிலமெங்கும் கிட்டத்தட்ட 10 க்கும் மேற்பட்ட தோழர்களுக்கு  விடைத்தாள் மறு மதிப்பீடு செய்து REVISED  RESULT அளிக்கப்பட்டது. ஏற்கனவே பணி  நியமனம் பெற்ற தோழர்கள்  தங்களின் பணி  நியமனத்தை ரத்து செய்திடக் கூடாது என்று கோரி நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்து தடையும் பெற்றனர் . இதனால் உரிய காலிப் பணியிடம் இல்லை என்றும் தடை ஆணை உள்ளதென்றும்  முறையாகத் தேர்வு பெற்ற இந்த GDS  ஊழியர்களுக்கு  தபால்காரர் பதவி அளிப்பது நிறுத்தப் பட்டிருந்தது. 

                 இந்தப் பிரச்சினை, பாதிக்கப்பட்ட தோழர். முத்துராமன் என்பவரை ஆதாராமாகக் கொண்டு ,  பலகாலமாக நம்மால் எழுப்பப் பட்டாலும் , நீதி மன்ற வழக்குகள் முடிவடையாத காரணத்தால் சிக்கல் தீரவில்லை. எனவே 2014 க்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டு தற்போது அதற்கும் தேர்வு நடைபெற உள்ள சூழலில் , 2013 இல் முறையாக தேர்வு பெற்றவர்களுக்கு உரிய பதவி உயர்வு வழங்கப் படாததை சுட்டிக் காட்டி நாம் CHIEF  PMG அவர்களிடம் பேசினோம். பிரச்சினையின் நியாயத்தை உணர்ந்த  CHIEF  PMG அவர்கள், உரிய சட்ட ஆலோசனை செய்த பிறகு முடிவெடுப்பதாக அறிவித்தார். 

          இந்தப் பிரச்சினை குறித்து நாம் பல்வேறு ஆவணங்களை நமது APMG, RECTT  திரு. N . ரவி அவர்களிடமும் அளித்துப் பேசினோம். இவற்றை  CHIEF  PMG அவர்கள் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும் அவர் உறுதி அளித்தார் . அதன் பேரில்  பிரச்சினையில் இறுதி முடிவு எடுக்கப்பட்டு  தற்போது பாதிக்கப்பட்டஅனைத்து ஊழியர்களுக்கும் உடனடி பணி  நியமனம் வழங்கிட நமது CHIEF  PMG அவர்களால் உத்திரவிடப்பட்டுள்ளது. உத்திரவின் நகலை கீழே பார்க்கவும். இந்தப் பிரச்சினையின்  தன்மையை புரிந்து கொண்டு பரிவுடன் முடிவினை எடுத்த நமது CHIEF  PMG  உயர்திரு. T. மூர்த்தி அவர்களுக்கும் , பிரச்சினை தீர்ந்திட உறுதுணையாக இருந்த  APMG, RECTT  திரு. N .ரவி   அவர்களுக்கும்   நமது அஞ்சல் மூன்று மற்றும் NFPE  GDS  சங்கங்களின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


NFPE DIAMOND JUBILEE CONVENTION AT MAYILADUTURAI DIVISION A GRAND SUCCESS !

அன்புத் தோழர்களுக்கு / தோழியர்களுக்கு  வணக்கம். 

கடந்த 12.10.2014 ஞாயிறு அன்று மயிலாடுதுறை  அஞ்சல் மூன்று கோட்டச்சங்கம் சார்பில் NFPE  வைரவிழா - கருத்தரங்கு  நிகழ்ச்சி ,  மயிலாடுதுறை பட்ட மங்கலத் தெரு  கோவிந்தம்மாள்  திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.  பிற்பகல் சுமார் 02.30 மணியளவில்  கொடியேற்று நிகழ்வுடன் நிகழ்ச்சி துவங்கியது . நமது சம்மேளனக் கொடியை  நம்முடைய அஞ்சல் மூன்றின் முன்னாள் பொதுச் செயலர் தோழர்.  K.V.S.  அவர்கள் ஏற்றி வைக்க,  மாநிலச் செயலர் தோழர்.  J .R . அவர்கள் விண்ணதிரும்  கோஷங்களை எழுப்பிட,  விழா இனிதே துவங்கியது. நமது அஞ்சல் மூன்றின் கோட்டச் செயலர்  தோழர். K . துரை  அவர்கள் வரவேற்புரையாற்றினார். தொடர்ந்து  கோட்டத் தலைவர் தோழர். P . ரவிச்சந்திரன் அவர்கள்  தலைமையுரை நல்கிட அதனைத் தொடர்ந்து  கருத்தரங்க நிகழ்வு  துவங்கியது.

நம் அஞ்சல் மூன்றின் மாநிலச் செயலர் தோழர். J .R . அவர்கள் , நம்முடைய அஞ்சல் தொழிற்சங்க வரலாற்றினை  உணர்வு பொங்க மிகச் சிறப்பாக எடுத்துரைத்தார்.  தொடர்ந்து  நம்முடைய  அஞ்சல் மூன்றின் அகில இந்திய பொதுச் செயலர் தோழர். N .S . அவர்கள் இலாக்காவின் இன்றைய நிலைமை குறித்தும் , மாறிவரும் சூழலில்  நம்முடைய தொழிற்சங்கக் கடமை குறித்தும் நாம் இதுவரை அறியாத பல  செய்திகளை  மிகச் சிறப்பாக பகிர்ந்து கொண்டார்.  பின்னர் பேசிய  நம்முடைய  முன்னாள் பொதுச் செயலர் தோழர். K.V.S.  அவர்கள் , ஏழாவது ஊதியக் குழு முன்னர் நம்முடைய சங்கம்  மற்றும் சம்மேளனம் சார்பாக அளிக்கப்பட்ட கோரிக்கை மனுவின் சாராம்சம் குறித்து விரிவானதொரு சிறப்பான உரையினை  வழங்கினார். 

இதனை அடுத்து , மயிலாடுதுறையில்  பணியாற்றி ஒய்வு பெற்ற   இயக்கத் தின் மூத்த  தலைவர்களுக்கு மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.  இறுதியில் , NFPE  GDS  சங்க மாநிலச் செயலர் தோழர். R . தன்ராஜ்,  அஞ்சல் மூன்று மண்டலச் செயலர் தோழர். R . குமார் , அஞ்சல் மூன்று மாநில உதவி நிதிச்செயலர் தோழர். R . பெருமாள் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினார். 

இந்த நிகழ்வு கிட்டத்தட்ட  ஒரு மத்திய மண்டல மாநாடு போல அமைந்திருந்தது என்றால் அது மிகையாகாது.  மண்டலம் முழுதும் இருந்து சுமார் 300 தோழர்கள் கொட்டும் மழையிலும்  கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள். இரவு 08.00 மணியளவில்  கோட்டச் சங்கத்தின் நிதிச் செயலர் தோழர். K . வெங்கடேஷ் அவர்கள் நன்றி கூற விழா இனிதே முடிவுற்றது. 

நிகழ்ச்சியில் எடுக்கப் பட்ட  சில புகைப்படங்களை உங்களின் பார்வைக்கு கீழே தருகிறோம்.






POST OFFICE IMPROVING BUSINESS WITHIN THEIR OWN EMPLOYEES !

'சொந்தக் காசில் சூனியம்' வைக்கலாமா ?

அஞ்சல் துறையின்  வியாபார யுக்தி  அபாரம் !
வணிகப் பெருக்கம் அமோகம் !
இனி எந்த ஒரு ஊழியரும் ஊதியமே வாங்க வேண்டாம் !
மாதம் 100 RD கணக்குகள்  அவரவர் பெயரிலேயே  துவக்குங்கள் ! 
ஆனால் மாதா மாதம் பணம் கட்ட வேண்டாம் ! 
PASS  BOOK போட வேண்டாம் !
( சும்மா கணக்கு எண்ணிக்கைக்குத் தானே !)

கிராமப் புற அஞ்சல் ஊழியர்கள்  வணிகப் பெருக்கம் என்ற 
பெயரில் கணக்குக் காட்ட  'பினாமி' யாக  RPLI  POLICY  உங்கள் பணத்திலேயே போடுங்கள் ! 

மாதா மாதம் PREMIUM  கட்ட வேண்டாம் ! 
ஆனால் மாதா மாதம் புதிது புதாதாக 'பினாமி ' பாலிசி போடுங்கள் ! 
பாலிசி எண்ணிக்கையை அதிகப் படுத்த வேண்டாமா ! 
கீழ் மட்ட அதிகாரிகள் உயர் மட்ட அதிகாரிகளிடம்  AWARD  வாங்க வேண்டாமா ! 

70%  பாலிசி க்கள்  இறந்து போனாலென்ன ?  
ஒவ்வொரு பாலிசி க்கும்  இலாகாவுக்கு  ரூ. 420/- செலவு ஆகிறதாம் ! 
ஆனால் நீங்கள் ரூ.15.00 க்கு WHOLE  LIFE  POLICY  ஆக மாதம்
100 பாலிசி போடுங்கள் ! வியாபார அபிவிருத்தி தானே ! 

ஒட்டு மொத்தத்தில் ரூ.15.00 வரவு ரூ. 420.00 செலவு . 
இது இலாக்கா ஆண்டு இறுதியில் கணக்கு எடுக்குமபோதுதானே 
தெரிய வரும் ! 

அது பற்றி நமக்கென்ன கவலை !
இருக்கவே இருக்கு இலாக்கா நட்டத்தில் இயங்குகிறது ! 
எல்லாரும்  BELT  ஐ இறுக்கிக் கட்டிக் கொள்ளுங்கள் என்ற கோஷம் !

உங்களுக்கு நீங்களே  'MY   STAMP' போட்டுக் கொள்ளுங்கள் ! வீட்டில் பெண்டாட்டி பிள்ளை குட்டிகளிடம் காட்டி பெருமை அடையுங்கள் !
வியாபாரம்  அபிவிருத்தி  அடைய வேண்டாமா ? 

நீங்களே PHILATELY  DEPOSIT  ACCOUNT உங்கள் பெயரிலேயே ஆரம்பித்துக் கொள்ளுங்கள் ! நீங்களே  வாங்கிய 
STAMP  ஐ கவுன்டரில் விற்றுக் கொள்ளுங்கள் ! 
வியாபார அபிவிருத்திதானே ? அமோகமாக  இலாக்காவுக்கு லாபமில்லையா ?

IMO பெருக வேண்டுமா ? உங்களுக்கு நீங்களே  MONEY  ORDER  BOOK   செய்யுங்கள் ! உடனடி பட்டுவாடா  என்று RECORD  செய்யுங்கள் ! பத்திரிக்கைகளுக்கு பேட்டி கொடுங்கள் ! 
எல்லாம் வியாபார அபிவிருத்தி அல்லவா ?

EPOST  'புடியுங்கள்' ! அல்லது உங்களுக்கு நீங்களே செலவு 
செய்து EPOST  அனுப்பி  அகமகிழ்ந்து கொள்ளுங்கள் !  

உங்கள் ஊதியப் பணத்தை குடும்பத்திற்கு ஏன் விரயம் செய்கிறீர்கள் ? இலாக்காவுக்கு லாபம் ஈட்ட இப்படியான உக்திகளை கையாளுங்கள் ! நிச்சயம்  லாபம் தான்  ! முடிந்தால் தனியார்  AGENCY  முறை மூலம் பெறும் பொருட்களை நீங்களே  வாங்கிக் கொள்ளுங்கள் !   

இப்படி தீவிரமாக BUSINESS  செய்துகொண்டிருக்கும் போது , 
பசி எடுத்தால்  நீங்கள் வெளியே சென்று  சாப்பிடாதீர்கள் ! 
உங்களுக்குள் நீங்களே   ஒருவரை ஒருவர் கடித்து  பசியாறுங்கள் !  அல்லது பசி எடுத்தால்  தன் சதையையே தானே 
கடித்து பசியாறுங்கள் !  பசி தீர்ந்து விடும் !
இலாகாவின் வணிகப் பசி இப்படித்தானே தன்  ஊழியரையே 
தான் கடித்து தன் பசி ஆறுகிறது ?

இவையெல்லாம்  வணிக வளர்ச்சி கூட்டங்களில் மேலதிகாரிகள் கீழதிகாரிகளுக்கு  அளித்திடும் INNOVATIVE  BUSINESS  
DEVELOPMENT  உக்திகளாகும்.  

இல்லையென்றால் , நாங்கள் மேல சொன்னவற்றையெல்லாம் கீழ் அதிகாரிகள் சுற்றறிக்கையாக , கிளை / துணை அஞ்சலகங்களுக்கு அனுப்புவார்களா ? அப்படி அனுப்பினார்கள் என்றால் , நிச்சயம் இவை மேலதிகாரிகள் அளித்த  ஆலோசனைகள் தானே ?   
வாழ்க அஞ்சல் துறை ! வளர்க வணிகப் பெருக்கம் ! 

இனி RECRUITMENT  NOTIFICATION  போடும்போது:

 'சொந்தக் காசில்  வணிகம் செய்து வியாபார அபிவிருத்தி செய்ய விருப்பம் உள்ளவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும் ' 
என்று  NOTIFICATION செய்தால்  நன்றாக இருக்கும் !. 
அல்லது 'சொந்தக் காசில் சூனியம்' வைத்துக் கொள்ள 
விருப்பமிருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்  என்று அறிவிக்கை செய்திடவும் !  இலாக்கா இப்படியே போனால்  நன்றாக வளரும் ! 
அதில் ஊதியம் பெறும்  நாமும்  வளர்ச்சியடைவோம் !

மேலே கண்ட விபரங்கள் எங்களால் ஏனோ தானோ என்று வேண்டா வெறுப்பில் சொல்லப் படவில்லை ! கண்டதைத்தான் சொல்லுகிறோம் ! 

 கீழே பார்க்க ஒரு உதாரணம் ! 
இது போல  பல கோட்டங்களில்  நடக்கிறது ! 
  
இதில் அதிகமாக  திருச்சி மற்றும்  மதுரை மண்டலங்களில் இருந்துதான்  நிறைய புகார்கள் 

உண்மையான அக்கறை உள்ள மேல் அதிகாரிகள்  
நிச்சயம் இருக்கிறார்கள் ! 

அவர்கள் பார்வைக்கு இந்த வலைத்தளம் மூலம் இது சென்றால் , அவர்களும் உடன்  இதன் மீது நடவடிக்கை எடுத்தால் ,   
REAL  BUSINESS  என்பதை நோக்கி  நாம் சென்றால் , 
நிச்சயம் இலாகா வளர்ச்சி பெறும் ! 
அந்த திசை நோக்கி  நாம் சிந்தித்தால்  அது  நமக்கும் , 
இலாக்காவுக்கும்  நிச்சயம் நல்லது! 

விமரிசனம் செய்வது மட்டும்  நம் நோக்கமாக இருக்க முடியாது !
இலாக்காவில்  ஊதியம் பெறும்  ஊழியர் என்ற வகையில் 'நமக்கு சோறிடும் கோவிலை இடிக்காதீர் ' என்று இடித்துரைக்கவும், உண்மையான வணிகம் புரிந்திடுங்கள் !என்று  வழி காட்டவும் 
நமக்கு கடமை இருக்கிறது !

மேலதிகாரிகள்  தலையிடுவார்களா ? பார்ப்போம் !