Tuesday 20 February 2018

அன்புத் தோழர்களே !! வணக்கம் 
1. நமது ஊழியர்கள் மீது கடுமையான டார்ச்சருடன்  கணக்குகள் துவங்கவேண்டும் என்பது .( நிர்வாகமா ? அரசாங்கமா ?) புரிந்து செய்கிறார்களா ?????????ஒரு கண்னோட்டம்.

ஒரு கிளை அலுவலகத்தில் சுமார் 500 புது RD கணக்குகள் துவங்குவதாக வைத்துக்கொள்வோம் ( உ-ம்) ஒரு நபர் 1000 ரூபாய் பணத்தை 100 கணக்காக நிர்வாகம் கூறுவது போல் இன்று ஒரே சிப் ஆரம்பிக்கப்பட்டு அதைக்கொண்டு SO வில் UPS வேலைசெய்யாத சூழலில் பினாக்கள் வேகமாக இயங்காத சூழலில் தனது சிரமங்களை தாங்கிக்கொண்டு அன்றைய கணக்கு துவங்கப்பட்டு pass book பிரிண்டர் இல்லாத நிலையிலும் புத்தகம் வழங்கி விடுகிறார்கள், இவ்வளவுக்கும்   கம்பி மூலம் செயல்படும் இரண்டு  நெட் இணைப்பு இருந்தும் சரிவர கிடைக்காமல் சிரமத்திற்கு இடையில் கணக்குகள் துவங்கி விடுகிறார்கள்,

அடுத்த மாதம் முதல் மாதா மாதம் அதே நபர் பணம் கட்ட வரும்போது அந்த 100 கணக்குகளுக்கு தனித்தனியாக Pay in  slip  பயன்படுத்த முடியுமா அதற்கு நிர்வாகம் silp supply செய்யுமா?  2. அத்துனை கணக்குகளையும் மூன்று இடங்களில் எழுத வேண்டும் அதாவது 300 வரிகள் எழுத சாத்தியமா? 3.அதற்கு எத்தனை A4 தாள் தேவைப்படும் அந்த ஒரு நபர் கணக்கை முடிக்க எத்தனை மணி ஆகும். 30 கணக்குகளுடன் மற்ற RPLI , SSA , SB இவைகளுடன் வரவு செலவு செய்யப்பட்டு கணக்கு முடிக்கவே 5 மணி நேரம் ஆகிறது அல்லவா . இத்துடன் மற்ற பட்டுவாடா பணிகளை வரவு வைத்த பின் பட்டுவாடாவிற்கு பின் கணக்கில் கொண்டுவர நேரத்தை கணக்கிட்டு பார்க்கவும்.  அந்த 300 கணக்குகள் நாள் ஒன்றுக்கு 30 வீதம் 10 நாட்களுக்கு ஒரு நபருக்கே வேலை செய்தால் மற்ற பழைய கணக்கு வைத்திருப்பவர் மற்றும் புதிய கணக்கு வைத்திருப்பவர் கணக்குகள் அந்தமாதத்தில் முடிக்க முடியுமா ? 

நாளைய நிலை, RICT கிளை அலுவலகங்களுக்கு வழங்கப்பட்டால் வெறும் sim card மூலம் நெட் இணைப்பு கொடுக்கப்படும் அதுவும் கிராமங்களில் என்ன நிலை என்பது அனைத்து விபரம் தெரிந்த நபர்களுக்கு தெரியும் ஏன் நமது கோட்ட நிர்வாகம் முதல் DSM தோழர்களுக்கு தெரியும். கிளை அலுவலகம் எவ்வாறு செயல்படப்போகிறது ??? பொறுத்திருந்து பார்ப்போம் .

ஆகவே தோழர்களே நாளை நடப்பதை நினைத்து செயல்படுங்கள், எந்த கணக்குகள் துவங்கினாலும் 10 ரூ 20 ரூ என பிரித்து போட முன்வராதீர்கள் . அப்படி இல்லை என்றால் நாளை நடக்க போகும் சிரமங்களுக்கு ஊழியர்களே சுமக்க வேண்டிவரும் என்பதை நிர்வாகத்திற்கு எடுத்து கூறுங்கள். வேலை செய்யப்போவது நாம் தான் நிர்வாகம் இல்லை என்பதை மனதில் கொள்க.
மீண்டும் நாளை இவன் AIPEU - GDS    

No comments:

Post a Comment