Sunday 6 March 2016

கடந்த 28.02.2016 மாநிலம் தழுவிய கருத்தரங்கம் & photos

கடந்த 28.02.2016 மாநிலம் தழுவிய கருத்தரங்கம் திருச்சி மாநகர் SRMU சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. நமது அழைப்பை ஏற்று அனைத்து சிறப்பு அழைப்பாளர்களும் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களையும் தற்போது வரக்கூடிய உறுப்பினர் சரிபார்ப்பு தொடர்பான விளக்கங்களைவும் தெரிவித்ததுடன் தமிழகத்தில் மட்டுமல்ல அகில இந்திய அளவில் முதன்மை சங்கமாக வருவதற்கு சம்மேளன உறுப்புச் சங்கங்களும் முழு முயற்சி எடுந்திடவேண்டி எடுத்துரைத்தனர்.

கருத்தரங்கத்திற்கு உதவிய அனைத்து பொறுப்பாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறது மாநிலச் சங்கம். மேலும் SRMU மண்டபத்தை ஏற்பாடு செய்து தந்த நமது முன்னால்  R 4 மாநில செயலர் மூத்த தோழர் K. ராஜேந்திரன் அவர்களுக்கும், உடலாலும் உழைப்பாலும் பெறும் உதவி செய்த P.4 மண்டல செயலர் தோழர் P.கோவிந்தராஜ் மற்றும் அஞ்சல் 3 திருச்சி கோட்ட செயலர் , R .3 நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறது மாநிலச் சங்கம்.

   கருத்தரங்கிற்கு மதிய உணவு வழங்கிய கோட்ட / கிளைகளுக்கும் செலவுகளில் பங்கெடுத்துக்கொண்டு நன்கொடை வழங்கிய தோழர் / தோழியர்களுக்கும் , கலந்துகொண்டு சிறப்பித்த அஞ்சல் 3, அஞ்சல் 4 RMS நிவாகிகள் மற்றும் தோழர்களுக்கும்,  Contingent casual labor தோழர்களுக்கும்   நன்றி தெரிவித்துக்கொள்கிறது மாநிலச் சங்கம்.



  மிகக் குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்திட்டாலும் நாங்களும் தயாராகத்தான் இருக்கிறோம் என்று கருத்தரங்கிற்கு இரயில் மூலமாகவும், பேருந்திலும், மகிலுந்திலும் வந்து கலந்துகொண்டு மாநிலச் சங்கத்திற்கு பெருமை சேர்த்த நிர்வாகிகளுக்கும், தோழர், தோழியர்களுக்கும் மாநிலச் சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

 
 
 

 





 

 
 




  
 


  
      
 
 

 

 
 

No comments:

Post a Comment