Tuesday 22 December 2015

GDS ஊழியர்களுக்கு கமலேஷ் சந்திரா என்ற ஓய்வுபெற்ற அதிகாரி தலைமையில் ஊதியக்குழு



GDS ஊழியர்களுக்கு கமலேஷ் சந்திரா என்ற  ஓய்வுபெற்ற  அதிகாரி தலைமையில் ஊதியக்குழு நேற்று 21.12.2015 அன்று அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

(செவிடன் காதில் ஊதிய சங்காக ) அரசுக்கு இரண்டரை ஆண்டுகளாக நாம் கேட்பது இப்படி ஆகிவிட்டது. வழக்கம்போல் TRCA, POINTS , தூரம் கணக்கீடு, பணிமுறிவு தொகை, சேமநல தொகை, வழக்கம்போல் Conduct & service rule 1964 போய்,  Conduct & Employment 2001 போய், போய்!!  Conduct & Engagement 2011 போய்விட்டு வேறு என்னதான் வரும்? பொறுத்திருந்து பாப்போம்!!!  

இலாக்கா  ஊழியர்கள் தான் முடிவு செய்யவேண்டும் என்பதே ஒவ்வொரு  GDS  ஊழியரின் கோரிக்கை 

(ரூ . 92,000.00 ) தொண்ணுற்று  இரண்டாயிரம் கோடியை சுமார் 10 சதம் உள்ள உயர்மட்ட அதாவது  ஆகாயத்தில் பறப்பவர்களுக்காக,  தரையில் அதாவது தண்டவாளத்தில் பறக்கவைக்க போகிறார்களாம் நமது இந்திய ஆட்சியாளர்கள்.

ஒவ்வொரு அடிமட்ட குடிமகனும் உயர்ந்தால் தான் இந்தியா உயர்ந்ததாக கருதமுடியுமே தவிர இப்பெரும் தொகையை குறிப்பிட்ட நபர்களுக்காக செலவு செய்வதினால் இந்தியநாடு நிச்சயம் பெருமைப்பட வாய்ப்பு இருக்க முடியாது என்பதுதானே உண்மையிலும் உண்மையாக இருக்கமுடியும்!!!!!! 


என்று தணியும் இந்த சுதந்திர தாகம் ( அஞ்சல் இலாக்காவில் )


No comments:

Post a Comment