Wednesday 9 December 2015





மாநிலச் சங்கத்தின் முயற்சிக்கு மேலும் ஒரு வெற்றி !
பாதிக்கப் பட்ட GDS  ஊழியர்களுக்கு இதனை  தெரிவிக்கவும் !
அந்தந்த  கோட்ட அதிகாரிகளை உடன் அணுகவும் !

நம்முடைய 26.3.2015 மாநிலம் தழுவிய வேலை நிறுத்தத்தின் ஒரு கோரிக்கை - 2011 முதல்  தீர்க்கப்படாமல் இருக்கும், ஒய்வு பெற்ற /இறந்து போன / பதவி உயர்வு பெற்ற / பணியில் இருந்து வெளியேறிய அனைத்து GDS  ஊழியர்களுக்கும் வழங்க வேண்டிய  SEVERANCE AMOUNT உடனடியாக வழங்கப்பட வேண்டும் என்பதே ஆகும் !.

GDS  ஊழியர்களுக்கு SDBS அறிமுகப்படுத்தப் பட்டதால்,  SEVERANCE AMOUNT வழங்குவதற்கான வழிகாட்டுதல்  பெற PFRDA வை  நாட வேண்டி இருந்தது.  இது குறித்து எந்த ஒரு நிர்வாகமும்  கவலை கொள்ளவில்லை

நம்முடைய  தமிழகம் தழுவிய வேலை நிறுத்தத்தின் பின்னர் நடவடிக்கை துவங்கப்பட்டது.  பின்னர்  இது குறித்து கடந்த 6.8.2015 அன்று நடைபெற்ற  RJCM  கூட்டத்தில்  நம்முடைய அஞ்சல் மூன்றின் மாநிலச் செயலர் இந்தப் பிரச்சினையை வைத்து பேசினார்.  நம்முடைய CPMG இதன் மீது உடன் நடவடிக்கை  எடுப்பதாக  உறுதி அளித்தார். இதனால் பிரச்சினை இல்லாத ,  தேங்கிக் கிடந்த 100 பேரின்  SEVERANCE தொகை  வழங்கப்பட்டது

மீதம் உள்ளவர்களின் பிரச்சினை தீர்வுக்கு வழிகாட்டு முறை தற்போது பெறப்பட்டுள்ளது . அதன் படி விரைவில்  தேங்கிக் கிடக்கும் அனைத்து CASE  களும்  SETTLE  செய்யப் படும் என்று  உறுதி அளிக்கப் பட்டுள்ளது

கீழே  பார்க்க  :  RJCM இல்  நாம் எழுப்பிய  பிரச்சினை  மற்றும்  அளிக்கப் பட்ட பதில்:- 

No comments:

Post a Comment